கூழாங்கற்கள் - எழுத்தாளர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்த்து
கே . எஸ் . இராதாகிருஷ்ணன் - கதை சொல்லி இணை ஆசிரியர், திமுக செய்தித் தொடர்பாளர், உயர் நீதி மன்ற வழக்கறிஞர் அவர்களின் வாழ்த்து எங்களின் தெற்குச் சீமை நாற்றாங்காலில் துளிர்விட்டுள்ள , அன்புக்குரிய கனவுப்பிரியனின் படைப்புகள் யாவும் கவனத்தை ஈர்க்க்க்கூடியது . ஒரு படைப்பாளி இயற்கை , சமுதாயம் , மக்கள் பிரச்சனைகளின் மீது அக்கறையும் ஆர்வமும் இருந்தால்தான் தன்னுடைய ஆக்கப்பணிகளில் வெற்றி பெறமுடியும் . கனவுப்பிரியன் அதற்கு இலக்கணமாகத் திகழ்பவர் . பாரதியை ஆதர்சனப் புருசனாக்க் கொண்டு , தன் பணிகளை இலக்கிய உலகிற்கு ஆற்றி வருகின்றார் . முத்துக்குளிக்கும் தூத்துக்குடி நகரில் பிறந்து , சாதாரண நடுத்தர மக்களோடு பழகி , அவர்களுடைய பாடுகள் , நிலைமைகளைக் கொண்டு தன்னுடைய படைப்புகளை மக்களிடமிருந்தே உருவாக்கி இருக்கின்றார் . குறிப்பாகத் தூத்துக்குடி , நெல்லை , தூத்துக்குடி , காயல்பட்டிண இஸ்லாமிய சகோதர்ர்களின் வாழ்க்கைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்து , ஆழமாகச் சிந்தித்து , சமுதாய அவலங்களையும் நிகழ்வுகளையும் தன் படைப்புத்திறனில் உருவாக்கிய...
Comments