சுமையா சிறுகதைத்தொகுப்பு பற்றிய Sakthi RS அவர்களின் வாசிப்பனுபவம்
கதை 1 - சுமையா : கதையோட ஒன்லைன் பார்த்தால் சாதாரணம். 27 வயது திருமனம் ஆகாத சுமையா அவள் சித்தி ஆயிஷா சுமையாவின் தங்கைக்கு வந்திருக்கும் வரன் என ஒரு போட்டோ காட்டுகிறாள்.... பின் சில சம்பாசனைகளில் சுமையா தானும் ஏன் மனம் செய்துக்கொள்ள கூடாது என எண்ணம் உருவாக... சுமையாவை ஆயிஷா சம்மதிக்க வைக்கிறார். இதில் வழக்கம்போல கடைசிவரிகளில் சுஜாதாவின் முத்திரை சற்றே கவிதை நயத்தோடு.. இந்த சாதாரண 11 பக்கமே உள்ள கதையில் - ஆங்காங்கே அழகான சாரல் போல சில வரிகள்... 1. வாழ்வில் அடுத்து என்ன என்ற கேள்விக்கு விதியிடம் மட்டும்தான் பதிலுண்டு. 2. வெளியே இருப்பவர்கள் சொந்த வீட்டிற்கு வரும்போது அதிக அன்பு கிடைக்கும்...அதை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் . மீண்டும் ஊர் சென்றதும் அசை போட்டும் திருப்தி அடைய... 3. அன்பின் வடிவம்தானே காதல்... எதைக் காதலிக்கிறோம் என்பதைப் பொறுத்து அதுவும் நான் என்பதை மறக்கடிக்கச் செய்யும் தியானம்தான்.... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இவரின் வார்த்தை ஜாலத்தை... முக்கியமாக இந்தக் கதையின் பாத்திரப் படைப்பு பற்றி சொல்லியே ஆகவும்... கதையின் நாயகி சுமையாவின் பெயரை தலைப்பாக வைத்
Comments