கூழாங்கற்கள் புத்தகம் பற்றி தமிழ்குமரன்

ஆசிரியர் ‘கனவுப்பிரியன்’
கனவுப் பிரியன்
அவர்களின் ‘கூழாங்கற்கள்’
முதற் பதிப்பு :டிசம்பர் 2015
பக்கங்கள் 256
பிரசுரம் ஓவியா பதிப்பகம்
17.3.11, ஸ்ரீராம் காம்பளக்ஸ்,
காந்தி நகர் மெயின் ரோடு,
பத்லகுண்டு,.642 202.
தமிழ்நாடு :ந்தியா.
தொரலைபேசி : 0543-. 262686
மொபைல்: 766 755 7114, 96296 52652

பிரபல எழுத்தாளர் என் மனம் கவர்ந்த திரு கி .ராஜநாரயணன்
அவர்களின் பராட்டுதல்களுடன் திரு கனவுப்பிரியன் அவர்களின்
21 சிறுகதைகள் அடங்கிய சிறுகதை தொகுப்பாகும். இந்த புத்தகம்‘கூழாங்கற்கள்’

நான் எப்போதும் முன்னுரைகளை படிப்பதில்லை.
காரணம் அந்த பாதிப்பில் என் படிப்பு சுவாராஸ்யம் குறைந்து
என்னுடைய விமர்சனங்களும் தடம் புரள ஆரம்பித்துவிடுகிறது.

நான் இப்ப நேரிடையாக கதைகளுக்குள் செல்கிறேன்.
‘இந்த மடம் இல்லைன்னா சந்த மடம் கதை’யிலுருந்து 21வது கதையான ‘நீங்க அழகாக இருக்கீங்க’ 21 கதைகளும் மிக ஜெட் வேகத்தில் செல்கிறது
நானும் அதே வேகத்தில் பயணித்து படித்தேன் .

இவருடைய அனைத்து கதைகளும் சுஜதாவின் கதை போல முதல் வரியிலே கதை ஆரம்பித்துவிடுகிறது என்பதே சுவாரஸ்யம்.

எளிய எழுத்து நடை. ஆவலை தூண்டுகிற முடிவு’
கதாபாத்திரங்களின் வர்ணணை இல்லாமல் நம்மை அவர்களின் செய்கைகளின்பால் உணர வைத்தும் சில கதைகளை தவிர அனைத்து கதைதகளிலும் கதாசரியரே ஒரு பாத்திரமாக உலவிவருவதும்
புதுமைதானே .
இப்படிப்பட்ட எழுத்துகளை அமரர் கல்கி யின் கதைகயில் பார்க்கலாம்’
இவர் பணிபுரிந்து வரும் அரபு நாடுகள் ஒரு சில கதைகளைதவிர மற்றவைகள் கதைகளமாக இருக்கின்றன.’

கதைக்களம் புதியதாக இருப்பதால் பல புதிய பாத்திரங்கள் நம்மை ஈர்க்கிறார்கள்’
,இன்றைய உலகின் முக்கிய தேவை அன்பு, தனது எல்லா கதைகளிலும்
இனம் ,மதம் ,மொழி ,சாதி இந்த வேற்றுமைகள் இன்றி நாம் பயணப்பட வேண்டிய அவசியத்தை முன்னிறுத்துகிறார்’
மற்றும் அப்படி வாழும் பாத்திரங்களையும் அடையாளம் காட்டுகிறார்’
இதற்கு பரஸ்பர அன்பு மட்டுமே போதும் என்பதுதான்
இவருடைய அனைத்து கதைகளும் நமக்கு உணர்த்துகிறது’
அதனை நமக்கு தெளிவாக காட்டி அதில் வெற்யியும் அடைந்துள்ளார் கதாசரியர்’

இந்த இயந்திர கதையில் அன்பு மட்டுமே நம்மை கடைசிவரைக்கும் பதப்படுத்தும் என்பதை பல கதைகளில் உணர வைத்துள்ளார் .
ஐயப்பன், பாலா , குண்டு பாகிஸ்தானி ,காட்சிபிழை கதையில் அந்த இளைஞன் ,பலவேசமுத்து ,வித்யா ,பிலிப்பைன்ஸ் பெண் ஜுவானா இப்படி பல பாத்திரங்கள் ‘நம்மை பலர் ஆர்க்கிமிக்கிறார்கள் . 

சில பாத்திரங்களை நாம் வாழ்க்கையில் எங்கோ சந்தித்தது போல இருப்படித காணலாம்,
இனி ஒரு விதி செய்வோம் இன்றைய சமுதாய அரசியல் சீர் கேடுகளுக்கு சாட்டையடி,
பனங் கொட்டை சாமியார் நம்மால் எப்படியும் வாழ முடியும் என
உணர்த்தும்
அனில் கும்பிளே மாதிரி செம கதை ,இதை படித்து பல முறை நான் சிரித்துவிட்டேன் .என் பையன் கூட அப்பா ஏன் இப்படி சிரிக்கிறாரு என தலையை பிய்த்துக்கொண்டான்

எதார்த்தம் ,எளிய நடை
இவருக்கே உரித்தான ஒரு புதிய நடை
படைப்பாளிகளின் பெரிய பிரச்சனையை மொழியின் எழுத்தது நடைதான் என கி. ரா தனது முன்னுரையில் நான் பின்னர் படித்தபோது
தெரிந்தேன் அந்த முயற்சியில் கனவுப்பிரியன் வெற்றி பெற்றுவிட்டார் என சொல்வேன்

வாழ்த்துகள் வளரட்டும் மற்றும் தொடருட்டும்

அவரின் எழுத்துப்பணிகள்’.
----தமிழ்க்குமரன்


Comments

Popular posts from this blog

சுமையா சிறுகதைத்தொகுப்பு பற்றிய Sakthi RS அவர்களின் வாசிப்பனுபவம்

கூழாங்கற்கள் புத்தக வெளியீடு பற்றி ஜன்னல் இதழில்

சுமையா - சிறுகதைத்தொகுப்பு பற்றி சுப்ரா வே சுப்பிரமணியன்